நீதி தேவதையே உன்னிடம்
----------------------------------------
நீதி தேவதையே உன்னிடம்
சரணடைந்துஇசரணகதியாய் முறையிடுகிறேன்....
கறுப்புக் கூடுகள்
காலியாக இருந்த போது
காக்கிகள் எம்மை கண்டுபிடித்தன.
ஒரு நூறு கண்ணீர் சிந்தியும்
இரு நூறு உண்மை சொல்லியும்
துப்பாக்கி முனைகள் எம்மை
சிறை பிடித்தன.
கரைபடிந்த கரங்கள்
காகிதங்களில்
எம் தலையலுத்தை
பொரித்தெடுக்க
வதைத்தெடுத்த வாக்குமூலமும்
உதைத்தெடுத்த கையொப்பமும்
சாட்சியாகின.
இருண்ட அறை.
காக்கி நட்சத்திரங்கள் மின்னும் ஒரு இடம்மொன்றில் .
அவர்கள் காகிதங்களில் அவிழ்த்துவிட்ட
கதைகள் கட்சிதமாய் நிறைவேறியது.
கறுப்பு நீல சட்டைக்காரன் கையொப்பமிட்டார்.
எமக்கு எதிரான முதல் தீர்ப்பு வெளிவந்தது "சந்தேகநபர்கள்".
கம்பிகளின் பின்னால்இ
ஹிருதயத்தை செந்தணலில் வாட்டுவதாய்
நாகர்தன நொடிகள்.
ஓலைச் சத்தம்
தேசிய கீதமாய் இசைக்கும்
பின்னோக்கி கூர்படைத்த
ஒரு சமூகத்துடன்
இணைகப்பட்டோம்.
ஒரு நாள்
கறுப்பு நீல சட்டைக்காரர்
மீண்டும் கையளுத்திட்டார்.
நான் விடுவிக்க பட்டோம்
தவணை சுகந்திரத்தில்.
இறுதியில் ஒரு நாள்
கறுப்பு நீல சட்டைக்காரர்
மீண்டும் பேனாவை கிறுக்கினான்
நாம் நிரபராதி என்றனர்.
சமூக திறந்த வெளி சிறைச்சாலையில்
நாம் ஆயுள் தண்டனை பெற்ற பின்.
ஷஃபி எச் . இஸ்மாயில்
----------------------------------------
நீதி தேவதையே உன்னிடம்
சரணடைந்துஇசரணகதியாய் முறையிடுகிறேன்....
கறுப்புக் கூடுகள்
காலியாக இருந்த போது
காக்கிகள் எம்மை கண்டுபிடித்தன.
ஒரு நூறு கண்ணீர் சிந்தியும்
இரு நூறு உண்மை சொல்லியும்
துப்பாக்கி முனைகள் எம்மை
சிறை பிடித்தன.
கரைபடிந்த கரங்கள்
காகிதங்களில்
எம் தலையலுத்தை
பொரித்தெடுக்க
வதைத்தெடுத்த வாக்குமூலமும்
உதைத்தெடுத்த கையொப்பமும்
சாட்சியாகின.
இருண்ட அறை.
காக்கி நட்சத்திரங்கள் மின்னும் ஒரு இடம்மொன்றில் .
அவர்கள் காகிதங்களில் அவிழ்த்துவிட்ட
கதைகள் கட்சிதமாய் நிறைவேறியது.
கறுப்பு நீல சட்டைக்காரன் கையொப்பமிட்டார்.
எமக்கு எதிரான முதல் தீர்ப்பு வெளிவந்தது "சந்தேகநபர்கள்".
கம்பிகளின் பின்னால்இ
ஹிருதயத்தை செந்தணலில் வாட்டுவதாய்
நாகர்தன நொடிகள்.
ஓலைச் சத்தம்
தேசிய கீதமாய் இசைக்கும்
பின்னோக்கி கூர்படைத்த
ஒரு சமூகத்துடன்
இணைகப்பட்டோம்.
ஒரு நாள்
கறுப்பு நீல சட்டைக்காரர்
மீண்டும் கையளுத்திட்டார்.
நான் விடுவிக்க பட்டோம்
தவணை சுகந்திரத்தில்.
இறுதியில் ஒரு நாள்
கறுப்பு நீல சட்டைக்காரர்
மீண்டும் பேனாவை கிறுக்கினான்
நாம் நிரபராதி என்றனர்.
சமூக திறந்த வெளி சிறைச்சாலையில்
நாம் ஆயுள் தண்டனை பெற்ற பின்.
ஷஃபி எச் . இஸ்மாயில்
0984 6161 29
ReplyDelete